Posts

Showing posts from April, 2022

9. மாவீரர் ஊமைத்துரை வரலாறு - இழந்த பகுதிகளின் உரிமைகளை மீட்டது மற்றும் ஆயுதச்சாலைகளை ஆயத்தம் ஆக்கியது..

Image
பாஞ்சையர் பலம்  மேலோங்கியது இரண்டாம் முயற்சியில் போர் செய்யவந்த கும்பெனி படைகள் புறமுதுகிட்டு பின்வாங்கிய நிகழ்வு மக்கள் மத்தியிலும், வீரர்கள் மத்தியிலும் ஒரு புத்துயிர் பிறந்ததை உணந்தனர். இதற்கு மீண்டும் கட்டப்பட்ட கோட்டையும், அரணை பலப்படுத்தியதுமே முக்கிய காரணமாக அமைந்தது.  இழந்த உரிமைகள் மீட்டது நெல்லைச்சீமையில்  ஏற்கனவே இழந்த தமக்கு உரிமையுள்ள  எல்லா பகுதிகளையும் ஊமைத்துரை மீட்டெடுத்தார். மேலும் எதிரிகளின் இயல்புகளையும், செயல்களையும், மதியூகங்களையும் ஒற்றர் மூலம் கண்காணித்து வந்தார், சேனைகளளை அதிகரிக்க அவர்கள் முயற்சிப்பதையும் அறிந்தார்.  ஆயுத சேமிப்பு அடுத்ததாக ஆயுத சாலைகளை தக்கபடி ஆயத்த படுத்த வேண்டும் என உறுதி பூண்டார். முன்னர் தங்களிடமிருந்து கவர்ந்த ஆயுதங்களை எல்லாம் சிந்துபூந்துரை மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆயுத சேமிப்பு கிடங்கில் சேர்த்து வைத்திருந்தனர் வெள்ளையர்கள். வேல், வாள், வளரி, வெடிபொருட்கள் மற்றும் நிறைய போர்க்கருவிகள் அங்கே சேர்த்து வைத்திருந்தனர். திட்டம் வகுக்கப்பட்டு எழுநூறுக்கும் மேற்பட்ட வீரர்களை தயார்செய்து வீரலக்கு, ரணவீரசின்னு,...

கட்டபொம்மனை தூக்கிலிட்ட மேஜர்.ஜான் பானர்மேன் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதம். "கட்டபொம்மனின் அஞ்சா நெஞ்சத் துணிவை படம் பிடித்து காட்டுகிறது"

Image
வரலாறு படைத்த மாவீரன் கட்டபொம்மனின் கடைசி நிமிடங்கள் பானர்மேன் தன் நாள் குறிப்பில் எழுதி இருப்பது.  " விசாரணையின்போது, பாளையக்காரர் கட்டபொம்மு நடந்துகொண்ட விதம் அதிசயிக்கத்தக்கது."  ---------------------------------------------------------         காயத்தார் முகாம் விசாரணை எனும் வினோத நாடகம்  அக்டோபர் 16-ஆம் நாள் நீதிபதியைப் போல் பானர்மேன் அமர்ந்து கொண்டு விசாரணையைத் தொடங்கினார். ராபர்ட் ட்யூரிங், ஜார்ஜ் ஹுயெஸ், மேஜர் பெர்கெட், கர்னல் பிரெளன் ஆகிய நான்கு பேரும் பானர்மேனுக்கு இருபக்கத்திலும் அமர்ந்து இருந்தனர். முதல் குற்றச்சாட்டு :  கிஸ்தி கொடுக்கவில்லை. கட்டபொம்மன்: கிஸ்தி கொடுப்பது எங்கள் வழக்கம் இல்லை. இரண்டாவது குற்றச்சாட்டு:    கலெக்டர் லூசிங்டன் அழைத்தும்கூட நீங்கள் போய்ப் பார்க்கவில்லை. அவரை மதிக்கவில்லை. கட்டபொம்மன்: கும்பினி அதிகாரிகள் என்னைப் பார்க்க வந்தபோது, மரியாதையாக நடத்தி இருக்கின்றேன்; அன்போடு உபசரித்து இருக்கின்றேன். ஆனால், ஜில்லா கலெக்டரைச் சந்திக்க வந்து காத்துக் கிடப்பதற்கு நான் ஒன்றும் வேலைக்காரன் அல...

8.மாவீரர் ஊமைத்துரை வரலாறு - சீமைத்துரைகள் வாஞ்சையுடன் எழுதி வைத்துள்ள ஊமைத்துரையின் கீர்த்தியும், பாஞ்சாலங்குறிச்சியின் புகழும்

Image
உறக்கமில்லாத இரவுக்கு மீண்டும் ஓர் பேரிடி கோட்டையை எளிதாக அழித்து விடலாம் என்ற கனவோடு வந்த மேஜர் மெக்காலே திகைத்து நின்றான். அவனுடன் வந்த தளபதி அந்த நிகழ்வை இவ்வாறு எழுதுகிறான்    "After a sleepless night, we marched the next morning and reached a plain close to Panchalamcoorchy by nine 'o' clock, when, to our utter astonishment, we discovered that the walls, which had been entirely levelled, were now rebuilt, and fully manned by about fifteen hundred Polegars"               " உறக்கமில்லாத இரவுக்குப் பிறகு, மறுநாள் காலை நாங்கள் அணிவகுத்து, ஒன்பது மணிக்கு பாஞ்சாலம்கூர்ச்சிக்கு அருகில் உள்ள ஒரு சமவெளியை அடைந்தோம், எங்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், முற்றிலும் சமன்படுத்தப்பட்ட மதில்கள் இப்போது மீண்டும் கட்டப்பட்டு, முழுமையாகக் கட்டப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தோம்.  மேலும் சுமார் ஆயிரத்து ஐந்நூறு பாளையக்காரர்கள் ஆயத்தமாய் இருந்தனர்"                  - The second polegar war- அரனும...

ஒன்பது சகோதரிகளின் மாபெரும் திருவிழா

ஒன்பது சகோதரிகளின் மாபெரும் திருவிழா

வரலாறு சொல்லும் நாயக்கர் சாதனைகள்

Image
1. திருமலை நாயக்கருக்கு கொடுக்கப்படும் முதல் மரியாதை 2. விருப்பாட்சி கோபல நாயக்கர் பழனி சதித்திட்டம்   3. வீரபாண்டிய கட்டபொம்மனும் திருச்செந்தூர் முருகனும் 4. திருமலை நாயக்கர் மஹால்

The Great Vijayanagara Empire

The Vijayanagara Emperor

7. மாவீரர் ஊமைத்துரை வரலாறு - ஊமையன் கோட்டையும், நெல்லைச்சீமை புரட்சியும்

Image
ஊமையன் கோட்டையை கண்டு கும்பெனியர் பின்வாங்குதல் குலசேகர நல்லூரில் தோற்று ஓடிய ஆங்கிலேயே படைவீரர்கள் ஆறுபேர் மாண்டு இருந்தனர்,. ஆனால், ஆங்கிலேயர் பெரும்படையுடன் 09-02-1801 அன்று மறுபடியும் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை நோக்கி நெருங்கி வந்தனர். எளிதாக ஊமைத்துரையை தோற்கடித்து அழித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் வந்த அவர்கள் கோட்டையின் தோற்றத்தைக் கண்டு மனம் தளர்ந்தனர்.  கோட்டையில் காணப்பட்ட பத்தாயிரக்கணக்கான வீரர்களைக் கண்டு தங்களது படை தோல்வியடைந்துவிடும் என்பதால் மேஜர் மெக்காலே தமது படையுடன் பின்வாங்கி 10-02-1801 அன்று பாளையங்கோட்டை சென்றடைந்தான். நெல்லை சீமையில் புரட்சியை தொடங்கிய ஊமைத்துரை நெல்லைச் சீமையில், புரட்சியைத் தொடங்கினார். விளாத்திக்குளம், ஒட்டப்பிடாரம் போன்ற பகுதிகள் அடுத்தடுத்து ஊமைத்துரையின் வசமாயின. பசுவந்தனையில் இருந்த ஆங்கிலப் படையின் முகாம் மீது சுதேச வீரர்கள், நள்ளிரவு நேரத்தில் கொரில்லா தாக்குதல் நடத்தினர். அந்த வீரப்போரில் ஆங்கில வீரர்கள் 64பேரும், பாஞ்சை வீரர்கள் 96 பேர் விண்ணுலகம் அனுப்பப்பட்டனர்.  தூத்துக்குடியை கைப்பற்றுதல் வெற்ற...

6. மாவீரர் ஊமைத்துரை வரலாறு - மன்னனின் மாட்சிமைக்குக் கோட்டை ஒரு சாட்சியாய் எழுந்து நின்றது

Image
மன்னனின் மாட்சிமைக்குக் கோட்டை ஒரு சாட்சியாய் எழுந்து நின்றது. தேசபக்தியும், இராச விசுவாசமும் நிறைந்த மக்கள் மிகுந்திருந்த -மையால் இடித்து தரையோடு தரைமட்டமாக்கப்பட்ட கோட்டையை மீள்உருவாக்கம் செய்வதில் அணைவரின் பங்கும் இருக்க வேண்டும் என்று மக்களுக்குள் ஒரு உத்வேகம் காணப்பட்டது. தங்களது மன்னரை தூக்கிலிட்ட கும்பெனியர் மீது கடுங்கோபம் கொண்டனர். அதன் வெளிப்பாடே ஒரே வாரத்திற்க்குள் கோட்டை கம்பீரமாய் எழுந்து நின்றது. மக்களின் மனதை வென்ற பாஞ்சை மன்னர் கோட்டை பீரங்கிகளின் எதிர்ப்பை தாங்கி நிற்க ஏதுவாக அதன் மதிலை கட்டமைத்தனர். கம்மஞ்சக்கையை இழைத்து குழைத்த மண்ணோடு சேர்த்து அதோடு கருப்பட்டிச்சாரு, கடுக்காய், பதநீர் சேர்த்து  படை படையாக மதிலை தொடுத்து கட்டினர். தென் திசைகளில் இருந்து பதநீர் குடங்கள் குடங்களாக நட்டாத்தி   என்னும் ஊரிலிருந்து பாஞ்சாலங்குறிச்சி வரை மக்கள் சங்கிலி தொடர்போல் நின்று கொன்று குடங்களை கைமாற்றி கோட்டையை கட்டுவதற்கு விரைந்து அனுப்பினர்.அதுபோல் மண்ணும்,கல்லும் வந்து சேர்ந்தது. உணவையும், உறக்கத்தையும் மறந்து, இரவு பகல் என்று பாராமல் உள்ளுருமையோ...

5.மாவீரர் ஊமைத்துரை வரலாறு- மீண்டும் பாஞ்சையில் கம்பீரமான கோட்டை எழுப்புதல்

Image
ஊமைத்துரை கட்டிய கம்பீரமான கோட்டை 02.02.1801 அன்று பாளையங் கோட்டை சிறை தகர்க்கப்பட்டு தப்பியவுடன் உனடியாக கூடி ஆலோசிக்க பட்டது.  மேஜர் ஷெபர்டு   03-02-1801 ஆம் நாள் சங்கரன்கோவிலிருந்த படையுடன் புறப்பட்டு பாளையங்கோட்டை வந்தான். மற்ற பகுதிகளில் இருந்தும் படைகள் வர ஏற்பாடாயின. ஊமைத்துரை தப்பி பாஞ்சை. வந்த செய்தி அப்பகுதி மக்களிடையே தீயாய் பரவியது, மக்களையும் பக்கத்து பாளையங்களில் இருந்த புரட்சிக்காரர்களையும் ஒருங்கிணைத்தனர். தீவிரமாக ஆலோசிக்கபட்டு கோட்டையை மீண்டும் கட்டி எழுப்புவதென முடிவு செய்யப்பட்டு களத்தில் இறங்கினர். மக்களின் ஆதரவு இருந்தால் எதுவும் சாத்தியம் என்பதற்கிணங்க ஒரே வாரத்தில் நினைத்ததை சாதித்தும் காட்டினார். வரலாற்றை படிக்கிற போது - வெள்ளைய அதிகாரிகள் பெருமையோடு குறிப்பிடும் ஒரு கோட்டை -  ஊமைத்துரை கட்டிய கோட்டை. ஆங்கிலேய மேஜர் பானர்மென்னால் தரைமட்ட மாக்கப்பட்ட பாஞ்சாலங் குறிச்சிக் கோட்டையை மறுபடியும் ஊமைத்துரை  ஒரு வாரத்துக்குள் 08.02.1801 காட்டி விட்டதாகவும் அதை பார்த்து வியந்ததாகவும் வெள்ளையர்கள் பதிவு செய்கிறார்கள். ...

4.மாவீரர் ஊமைத்துரை வரலாறு - சிறைமீட்பில் கோட்டைவிட்ட கும்பெனியர்

Image
ஊமைத்துரை சிறைமீட்பில் கோட்டைவிட்ட கும்பெனியர் அதீத நம்பிக்கை, பேர் இடியாய் அமைந்தது. 05.09.1799 பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்து வந்த ஜான் பானெர்மேன் (John Banneeman) தலமையில் நடந்த முதல் பாஞ்சை போர் 16.10.1799 ல் முடிவுக்கு வந்து வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாரில் தூக்கலிடப்படுகிறார், கோட்டையும் தரைமட்ட மாக்கப்பட்டது, உதவிய மற்ற பாளையகாரர்கள் சிலரை தூக்கிலிட்டும், சிலரை சிறையிலும் அடைத்தனர். அத்தோடு மற்ற பாளையக் காரர்கள் யாரேனும் கும்பெனியரை எதிர்த்தால் இதுதான் கதி என்றும் பிரச்சாரம் செய்தனர். கட்டபொம்மன் இறந்துவிட்டான், கோட்டையும் அழிந்துவிட்டது இனி யாரும் கலகம் செய்யமாட்டார்கள் என்ற அதீத நம்பிக்கையோடு இருந்த கும்பெனியாருக்கு ஊமைத்துரை சிறைமீட்பு நிகழ்வு ஓர் பேர் இடியாய் அமைந்தது. தவறை ஆராயத் தொடங்கினர். .               Colin Macaulay தவறுக்கு காரணம் பாளையங்கோட்டை சிறைச்சாலை அருகில் ஒரு மைல் தூரத்தில் ஓர் கோட்டை இருந்தது அதில் தான் படைகளும், அதிகாரிகளும் தங்கி இருந்தனர். முதல் பாஞ்சை போர் முடிந்தவுடன்  மேஜர் பானர்மேன்  சீமைக்கு ...

3.மாவீரர் ஊமைத்துரை வரலாறு- பாளையங்கோட்டை சிறைமீண்ட பின்னணி

Image
பாளையங்கோட்டை சிறைமீண்ட பின்னணி பாளையங்கோட்டை சிறைச்சாலை தகர்த்தெறியப்பட்டு சிறையை விட்டு ஊமைத்துரை வெளியே வந்ததும், தமது இனத்தவர் மற்றும் திறண்டு இருந்த மானமுள்ள வீரர்கள் கூட்டத்த்தை பார்த்து மனதிற்குள் பெருமகிழ்ச்சி கொண்டார்.  அந்த நிலையிலேயே கும்பெனியர் மீது பாய்ந்து அங்குள்ள அதிகாரிகள், சேனதிபதிகள், பட்டாளங்களை வேட்டையாடிய பின்னரே பாஞ்சைக்கு போக வேண்டும் என்று வெகுண்டெழுந்தார். ஆனால் அங்கிருந்தவர் அவரை தடுத்து "இப்பொழுது வேண்டாம், பின்பு பார்த்துக்கொள்வோம்" என்று முறையிடவே அதற்கு சம்மதித்தார். ஆனால் அது ஒரு மிகப்பெரிய சந்தர்ப்பம் அது நடந்திருந்தால் கும்பெனியாருக்கு பெருத்த சேதம் அடைந்திருக்கும், அதன் விளைவுகள் வேறுமாதிரியாக இருந்திருக்கும் என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு எழுதி வைத்துள்ளனர் என்பது வரலாறு.அந்த சந்தர்ப்பம் நழுவிப்போனது பாஞ்சை பதிக்கு தீங்குமாய் வெள்ளையருக்கு சாதகமாய் அமைந்து விட்டது. என்ன செய்வது விதி வலியது என்றுதான் சொல்ல முடியும். பாளையங்கோட்டை சிறைச்சாலை ரகசிய  மீட்பில் கலந்து கொண்டவர்கள் முந்நூற்றி முப்பதியாரு பேர் என்றும் அதில் முன...

பாஞ்சாலங்குறிச்சியின் புகழை பேசும் திருவாவடுதுறை ஆதீன "கட்டபொம்மன் செப்பேடு"

Image
திருவாவடுதுறை ஆதீனம் கட்டபொம்மன் செப்பேடு  படி எடுத்து விளக்கம் சொன்னவர் தமிழ் பல்கலைக்கழகத்தின் இணைப்பேராசிரியர் புலவர் திரு செ.இராசு அவர்கள் செப்பேடு சொல்லும் செய்திகள்    1.பட்டயத்தின் முகப்பில் முருகனுடைடைய மயிலும், சேவலும், வேலும் பொறிக்கபட்டுள்ளது. 2. பட்டயத்தின் இறுதியில் 'பாஞ்சாலங்குறிச்சி பட்டயம்' என குறிக்கபட்டுள்ளது. 3. பட்டயத்தில்  தன் ஆட்சிக்கு உடப்பட்ட சில கிராமங்களில் வசதியாக(ஒட்டு வீட்டில்) வாழுவோர் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருடத்திற்கு குருணி தானியம் வழங்க வேண்டும் அது கோயிலின் திருப்பணி செலவுக்கு பயன்பட வேண்டும் என்ற உத்தரவு 4. வருடம் 18.1.1779 கட்டபொம்மனின் தகப்பனார் எழுதிகொடுத்தது. 5. அரசனை பற்றிய குறிப்புகள் பாஞ்சை நகருக்கு அதிபன் சக்கதேவி அனுகூலன் துட்ட நிக்கரக சிட்ட பரிபாலனன் கேசமன்னிய கோளரி மறு மன்னியர் சற்பக் கெருடன் ரணமுக சுத்த வீரன் அருண நயமுக சந்ரோதய நியலிசை நாடக முத்தமிழ் அதிபன் கவி சாருவ பூமன் பச்சை குடை பூச்சக்கரவாளக குடைக்கு அதிபன் தண்டுவார் மூண்டன் தென்னாட்டு ராயன் இரட்டை வாழுக்கு அதிபன் மயில்கொடி, சேவல்கொடி, ரிசபக்கொட...

சென்றாய பெருமாள் வரலாறு

Image
சென்றயபெருமாள் பாலகனாய் வந்த பெருமாள்! ------------------------------------------------------------ Vikatan Correspondent https://www.vikatan.com/spiritual/temples/109332- ------------------------------------------------------------ 'ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்று ஆண்டாள் பாடிய அந்த வாமனன் சின்னஞ்சிறு பாலகனாக, அதே நேரம் மீசையும் தாடியுமாகத் திருக்காட்சி தரும் கோயில் தான் ஸ்ரீ சென்றாயப் பெருமாள் கோயில். திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டுக்கு அருகில் உள்ள கோட்டைப்பட்டியில் உள்ள மலையின்மீது அமைந்திருக் கிறது இந்தக் கோயில்.  பல நூற்றாண்டுகளுக்கு முன், இந்தப் பகுதியில் ராஜகம்பளத்தார் வழியில் வந்த சென்னமநாயக்கர் என்பவர் பெரும் செல்வந்தராக இருந்தார். 60 வயதைக் கடந்த அவருக்குக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. ஒருநாள், மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளில் கன்று போடாத ஒரு பசு மட்டும் திரும்பவில்லை என்பதை அறிந்து, அந்தப் பசுவைத் தேடிச் சென்றார். அடர்ந்த மரங்கள் நிறைந்திருந்த மலைப் பகுதியில் ஓர் இடத்தில் அந்தப் பசுவைக் கண்டார். என்ன ஆச்சர்யம்! கன்று ஈனாத அந்தப் பசுவின் மடியில் இரு...

1.மாவீரர் ஊமைத்துரை வரலாறு - முதல் பாஞ்சை போரும், முடிவும்

Image
முதல் பாஞ்சை போரும், முடிவும் --------------------------------------------------------- Follow: விஜயநகர பேரரசு வரலாற்று களஞ்சியம்  https://www.facebook.com/profile.php?id=100077963244931  ________________________________________ பாஞ்சாலங்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு ஜெகவீர கட்டபொம்மு, ஆறுமுகத்தம்மாள் தம்பதியரின் மகனான வீரபாண்டிய கட்டபொம்மன் 47வது பட்டமேற்று1790-ம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வந்தார். அவருக்கு  ஊமைத்துரை (குமாரசாமி), துரைசிங்கம் (சுப்பா நாயக்கர்/சிவத்தையா) என்ற 2 தம்பிகள் இருந்தனர்.இவர்கள் இருவரும் அண்ணன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உறுதுணையாக இருந்து வந்தனர். வீரபாண்டிய கட்டபொம்மன், வெள்ளையர்களை எதிர்த்து அவர் களுக்கு வரி கொடுக்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவரை பிடித்து தூக்கிலிடவேண்டும் என்று எண்ணிய வெள்ளையர்கள் அவரை பிடிக்க முயற்சி செய்தனர். கர்னல் பானர்மேன் தலைமையின் கீழ்வந்த படை கோட்டையை முற்றுகை இட்டு முதல் பாஞ்சை போரை துவக்கினர். தீரத்தோடு எதிர்த்து போரிட்டு கோட்டையையும் மக்களையும் காக்க போராடினர். போரின் முடிவில் தளபதி வெள்ளையதேவன், வீரன்...

2.மாவீரர் ஊமைத்துரை வரலாறு - பாளையங்கோட்டை சிறை மீட்பு

Image
02.02.1801 பாளையங்கோட்டை சிறை தகர்ப்பும், ஊமைத்துரை சிறை மீட்பும்  வரலாற்றில் ஒரு வீர நிகழ்வு வரலாற்றில் மாபெரும் வீரர்       வரலாற்று ஏடுகளை புரட்டிப் பார்த்தால் மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மனின் சாதனைக்குப் பின்னால் ஒரு மாபெரும் வீரராகத் திகழ்ந்தவர் ஊமைத்துரை என்பது புலப்படும்!      கட்டபொம்மனும் அவருக்கு உதவிய பாளையக்காரர்களும்    16-10-1799 ஆம் நாள் தூக்கிலிடப்பட்டபின்னர், ஊமைத்துரையும் , பாளையக் காரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஆங்கிலேயர்களால் சிறையில் இரண்டு வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.  ரகசியதிட்டமும் காவடியாட்டமும்      ஊமைத்துரை சிறையிலிருந்து கொண்டே சிவகங்கையின் மருது பாண்டியர்களுடனும், விருப்பாச்சி பாளையத்தின் கோபால நாயக்கருடனும் இரகசியமாக கடிதத் தொடர்பு கொண்டார். ஊமைத்துரையைச் சிறையிலிருந்து விடுவிக்கத் திட்டம் உருவாகியது. புரட்சியாளர்கள் இருநூறு பேர் 01.01.1801 ஆம் நாள், திருச்செந்தூர் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் போல் உடையணிந்து , காவடிகளைத் தூக்கிக் ...