சின்ன நெகமம் பாளையக்காரர் கல்வெட்டு
கொங்கு கல்வெட்டு ஆய்வு ஞாயிறு, 9 அக்டோபர், 2016 சின்ன நெகமத்தில் பாளையக்காரர் கல்வெட்டு பாளையக்காரர்கள் – ஒரு முன்னுரை விசயநகரப்பேரரசின் தோற்றம் கி.பி. 1336-ஆம் ஆண்டில் இந்தியாவின் தென்பகுதியில் விசயநகரப் பேரரசு உருவானது. பின்னர் கி.பி. 1378-இல், விசயநகர அரசின் இளவரசரான குமார கம்பணன் மதுரையை வெற்றிகொண்டார். தொடர்ந்து தமிழகம், கேரளம் ஆகிய இரண்டும் விசயநகர ஆட்சியின்கீழ் வந்தன. விசயநகர அரசு பல நிருவாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. தமிழகத்தில் இந்த ஆட்சிப்பிரிவுகளுக்குத் தலைவர்களாக மண்டலாதிபதிகள் நியமிக்கப்பட்டார்கள். இவர்களுக்குத் தனியே படையும் உண்டு. பின்னர், 15-ஆம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளில் “நாயக்கர்கள் ” என்னும் படைதலைவர்களின் உருவாக்கம் நிகழ்ந்தது. கிருஷ்ணதேவராயரின் நாயக்கத்தனம் எனினும், நாயக்கர் உருவாக்கம் முழுமையான வடிவமும் சிறப்பான நிலையும் பெற்றது கிருஷ்ணதேவராயரின் ...