வரலாறு படைத்த மாவீரன் கட்டபொம்மனின் கடைசி நிமிடங்கள் பானர்மேன் தன் நாள் குறிப்பில் எழுதி இருப்பது. " விசாரணையின்போது, பாளையக்காரர் கட்டபொம்மு நடந்துகொண்ட விதம் அதிசயிக்கத்தக்கது." --------------------------------------------------------- காயத்தார் முகாம் விசாரணை எனும் வினோத நாடகம் அக்டோபர் 16-ஆம் நாள் நீதிபதியைப் போல் பானர்மேன் அமர்ந்து கொண்டு விசாரணையைத் தொடங்கினார். ராபர்ட் ட்யூரிங், ஜார்ஜ் ஹுயெஸ், மேஜர் பெர்கெட், கர்னல் பிரெளன் ஆகிய நான்கு பேரும் பானர்மேனுக்கு இருபக்கத்திலும் அமர்ந்து இருந்தனர். முதல் குற்றச்சாட்டு : கிஸ்தி கொடுக்கவில்லை. கட்டபொம்மன்: கிஸ்தி கொடுப்பது எங்கள் வழக்கம் இல்லை. இரண்டாவது குற்றச்சாட்டு: கலெக்டர் லூசிங்டன் அழைத்தும்கூட நீங்கள் போய்ப் பார்க்கவில்லை. அவரை மதிக்கவில்லை. கட்டபொம்மன்: கும்பினி அதிகாரிகள் என்னைப் பார்க்க வந்தபோது, மரியாதையாக நடத்தி இருக்கின்றேன்; அன்போடு உபசரித்து இருக்கின்றேன். ஆனால், ஜில்லா கலெக்டரைச் சந்திக்க வந்து காத்துக் கிடப்பதற்கு நான் ஒன்றும் வேலைக்காரன் அல...