Posts

Showing posts with the label ஜாக்சன் துரை

கட்டபொம்மன் உண்மை வரலாறுகள்- ஜாக்சன் துரை கடிதம்

Image
இராமநாதபுரத்தில் கட்டபொம்மன் சந்திப்பில் ஏற்பட்ட போர் நிகழ்வை பற்றி ஜாக்சன் மேலதிகாரிகளுக்கு எழுதிய கடிதம். "பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனாகிய கட்டபொம்மு நாயக்கன் என்னை போட்டிக் காண வருவதாகப் பாவனை காட்டி 4000 போர் வீரர்களுடன் இராமநாதபுரம் வந்து தங்கினான். 9.9.1798 மாலை 5 மணிக்கு என்னை காண வேண்டும் என ஆள் மூலம் சொல்லி அனுப்பினான். நான் மறுநாள் காலை 10 மணிக்கு காணலாம் என சொல்லி அனுப்பினேன். குறித்த காலத்தில், அவனும், அவனுடைய தம்பி ஊமையும், தானாபதியும், படைவீரர் சிலரும் அடைவாக வந்தனர். அவனை உரிமையோடு இருக்கச்செய்து நம் ஆட்சிக்குரிய வரியைச் செலுத்த வேண்டிய முறையை குறித்து உரைத்தேன். ஒன்றுக்கும் பதில் சொல்லாமல் உள்ளச்செருக்கோடு ஊக்கமுடன் பேசினான். கண்ணியம் வாய்ந்த நம் கும்பெனி ஆளுகையை மதியாமல் திண்ணியனாய் நின்று நாளும் அவன் செய்துவரும் தீங்குகளை எல்லாம் தெளிவுற எடுத்துக்காட்டி இனிமேல் பாங்குடன் அடங்கி நடந்துவரும்படி பண்போடி கூறினேன். அங்ஙனம் இதமாக நான் கூறி வருங்கால் அவன் மதம் மீறித் திடீரென்று திமிறி எழுந்து வெளியே போனான் . நம் தளபதியாகிய கிளார்க் (Clarke) வேகமாய் எதிரே புகுந்து அவன...