Posts

Showing posts with the label கட்டபொம்மன் உண்மை வரலாறுகள்

கட்டபொம்மன் உண்மை வரலாறுகள் - ஜாக்சன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது.

Image
கட்டபொம்மன் உண்மை வரலாற்றுச் சான்றுகள் - ஜாக்சன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது. ஜாக்சனை நோக்கி நீதி விசாரணையில் எழுப்பப்பட்ட கேள்விகள். 1. தென்னாட்டின் தலைமை அதிகாரத்தை உனக்கு தந்திருந்தும் அந்நாட்டின் நிலைமை தெரியாமல் நடந்திருக்கிறீர். 2. கட்டபொம்மனோடு நட்பு பாராட்டி இதமாக நெருங்கி வரியை வசூலிக்காமல் முரட்டுத்தனமாக கலகம் விளைவித்துள்ளீர்.  3. கொலைகள் விழக் காரணமாய் இருந்துள்ளீர். வர வேண்டிய வரி வரவில்லை. 4. பாரம்பரியமாக அங்கு சிறந்து வந்துள்ள ஒரு பாளையக்காரரை அவர்கள் வேலையரியாமல் பல இடங்களுக்கும் அலைய வைத்து வெறுப்பை உண்டாக்கியுள்ளீர். 5. அதனால் பெரிய கலகம் உண்டாகியிருக்கிறது. விநயமில்லாத உன்னை இன்று முதல் இப்பதவியிலிருந்து நீக்குகிறோம். 🙏🙏🙏 Click : 👇 விஜயநகர பேரரசு வரலாற்று களஞ்சியம்

கட்டபொம்மன் உண்மை வரலாற்றுச் சான்றுகள் - பானர்மேன் செப்பேடு

Image
மேஜர்_பானர்மேன்_செப்பேடு கட்டபொம்மன் உண்மை வரலாற்றுச் சான்றுகள்   பானர்மேன் செப்புப்பட்டயச் தேவையாகும்.. ஆர்சுகாட்டு தாலாபு 1781-இல் ஆங்கிலேயருக்குக் கொடுத்திருந்த வரி கண்டும் உரிமையை 1785-இல் திரும்பப் பெற்றார். தமிழகத்தின் தெற்குச் சீமையில் வரிதண்டும் உரிமையை மட்டுமாவது தங்களிடம் ஒப்படைக் குமாறு ஐங்கிலேயரி நவாபை வற்புறுக்கினர். அவர் அதற்கு உடன்படவில்லை தவாபின் விருப்பத்திற்கு எதிராக 1790-இல் தெற்குச் சீமையில் வரிதண்டும் உரிமையைத் தாங்களே ஏற்றுக்கொளீடதாக ஆங்கிலேர் ஓர் அறிக்கையை வெளியிட்டார். திருநெல்வேலியில் ஒழுங்காகச் சம்பளம் கிடைக்கப்பெறா மல் நிலைகுலைந்து நின்ற நவாபின் படைகளையும் அவர்கள் தங்களோடு எளிதாக இணைத்துக் கொண்டனர். தவிர்க்க இயலாத சூழ்நிலையில் நவாபு 1792-இல் ஆங்கிலேயருடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன் படி பூஆங்கிலேயர் தெற்குச் சீனமகளிலே வரிதண்டல் செய்து செலவு போக எஞ்சிய தொகையை அவர்களுக்கு நவாபு கொடுக்க வேண்டிய சுடனுக்கு வரவு வைத்துக் கொள்ளவேண்டும். கடன்தொகை முழுவதும் வரவு வந்த பின்னர் நாட்டைத் திரும்ப நவாபிடம் ஒப்படைத்து விட வேண்டும் என முடிவு செய்யப...

கட்டபொம்மன் உண்மை வரலாறுகள்- ஜாக்சன் துரை கடிதம்

Image
இராமநாதபுரத்தில் கட்டபொம்மன் சந்திப்பில் ஏற்பட்ட போர் நிகழ்வை பற்றி ஜாக்சன் மேலதிகாரிகளுக்கு எழுதிய கடிதம். "பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரனாகிய கட்டபொம்மு நாயக்கன் என்னை போட்டிக் காண வருவதாகப் பாவனை காட்டி 4000 போர் வீரர்களுடன் இராமநாதபுரம் வந்து தங்கினான். 9.9.1798 மாலை 5 மணிக்கு என்னை காண வேண்டும் என ஆள் மூலம் சொல்லி அனுப்பினான். நான் மறுநாள் காலை 10 மணிக்கு காணலாம் என சொல்லி அனுப்பினேன். குறித்த காலத்தில், அவனும், அவனுடைய தம்பி ஊமையும், தானாபதியும், படைவீரர் சிலரும் அடைவாக வந்தனர். அவனை உரிமையோடு இருக்கச்செய்து நம் ஆட்சிக்குரிய வரியைச் செலுத்த வேண்டிய முறையை குறித்து உரைத்தேன். ஒன்றுக்கும் பதில் சொல்லாமல் உள்ளச்செருக்கோடு ஊக்கமுடன் பேசினான். கண்ணியம் வாய்ந்த நம் கும்பெனி ஆளுகையை மதியாமல் திண்ணியனாய் நின்று நாளும் அவன் செய்துவரும் தீங்குகளை எல்லாம் தெளிவுற எடுத்துக்காட்டி இனிமேல் பாங்குடன் அடங்கி நடந்துவரும்படி பண்போடி கூறினேன். அங்ஙனம் இதமாக நான் கூறி வருங்கால் அவன் மதம் மீறித் திடீரென்று திமிறி எழுந்து வெளியே போனான் . நம் தளபதியாகிய கிளார்க் (Clarke) வேகமாய் எதிரே புகுந்து அவன...

15. மாவீரர் ஊமைத்துரை வரலாறு - பாஞ்சாலங்குறிச்சி படுகளத்தின் கோர சரித்திரம், பசுவந்தனை போர்

Image
பாஞ்சையர் உளவு கண்டது கும்பெனி படையினர் வரவை பாஞ்சை பதியினர் எதிர்பார்த்து நின்றனர். ஒரு வாரம் முன்பே அரசமுத்து, வீரமணி என்னும் ஒற்றர்களை ஊமைத்துரை யாரும் அரியா வண்ணம் ஏவியிருந்தார். அவர்கள் குதிரைகளுக்கு புல்லுக்கட்டுகள் விற்பவரை போல் உள்ளே புகுந்து முறையே உலவரிந்து படையெழுச்சி செய்யப்படும் தேதியை அறிந்தவுடன் பாஞ்சை வந்து நிலையை தெரிவித்தனர். உடனே படையைத் தாயார் செய்தார் ஊமைத்துரை. வரும் வழியே இடைமறித்து அடியோடு ஒழிக்க தீர்மானித்தார். பாஞ்சை மீது படை எடுக்க துணிவு கொண்டது பாளையங்கோட்டைவிருந்து 27.03.1801ந் தேதி காயத்தாறு வந்து சேர்ந்த மேஜர் மெக்காலே இரண்டு தினங்களாக  அங்கேயே தங்கி அதாவது 29ந் தேதி  தளபதிகளோடு கலந்தாலோசித்து ஊமைத்துரையின் செயல்திறன்களை தெளிவாக விளக்கினார். படையெழுச்சி செய்யவேண்டியதையும், வழியிடையே  அபாயங்கள் ஏற்படா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்திருந்தார்.  படையெழுச்சி மார்ச் மாதம் 30ந் தேதி காலை சூர்ய உதயத்திற்கு சற்றே முன்னர் பாஞ்சை மீது படையெடுக்க தளபதிகளுக்கு உத்தரவு கொடுத்தார். பீரங்கி வண்டிகள் முன்னே செல்...