சென்றாய பெருமாள் வரலாறு
சென்றயபெருமாள் பாலகனாய் வந்த பெருமாள்! ------------------------------------------------------------ Vikatan Correspondent https://www.vikatan.com/spiritual/temples/109332- ------------------------------------------------------------ 'ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்று ஆண்டாள் பாடிய அந்த வாமனன் சின்னஞ்சிறு பாலகனாக, அதே நேரம் மீசையும் தாடியுமாகத் திருக்காட்சி தரும் கோயில் தான் ஸ்ரீ சென்றாயப் பெருமாள் கோயில். திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டுக்கு அருகில் உள்ள கோட்டைப்பட்டியில் உள்ள மலையின்மீது அமைந்திருக் கிறது இந்தக் கோயில். பல நூற்றாண்டுகளுக்கு முன், இந்தப் பகுதியில் ராஜகம்பளத்தார் வழியில் வந்த சென்னமநாயக்கர் என்பவர் பெரும் செல்வந்தராக இருந்தார். 60 வயதைக் கடந்த அவருக்குக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. ஒருநாள், மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளில் கன்று போடாத ஒரு பசு மட்டும் திரும்பவில்லை என்பதை அறிந்து, அந்தப் பசுவைத் தேடிச் சென்றார். அடர்ந்த மரங்கள் நிறைந்திருந்த மலைப் பகுதியில் ஓர் இடத்தில் அந்தப் பசுவைக் கண்டார். என்ன ஆச்சர்யம்! கன்று ஈனாத அந்தப் பசுவின் மடியில் இரு...