7. மாவீரர் ஊமைத்துரை வரலாறு - ஊமையன் கோட்டையும், நெல்லைச்சீமை புரட்சியும்

ஊமையன் கோட்டையை கண்டு கும்பெனியர் பின்வாங்குதல்

குலசேகர நல்லூரில் தோற்று ஓடிய ஆங்கிலேயே படைவீரர்கள் ஆறுபேர் மாண்டு இருந்தனர்,. ஆனால், ஆங்கிலேயர் பெரும்படையுடன் 09-02-1801 அன்று மறுபடியும் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை நோக்கி நெருங்கி வந்தனர். எளிதாக ஊமைத்துரையை தோற்கடித்து அழித்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் வந்த அவர்கள் கோட்டையின் தோற்றத்தைக் கண்டு மனம் தளர்ந்தனர். 

கோட்டையில் காணப்பட்ட பத்தாயிரக்கணக்கான வீரர்களைக் கண்டு தங்களது படை தோல்வியடைந்துவிடும் என்பதால் மேஜர் மெக்காலே தமது படையுடன் பின்வாங்கி 10-02-1801 அன்று பாளையங்கோட்டை சென்றடைந்தான்.

நெல்லை சீமையில் புரட்சியை தொடங்கிய ஊமைத்துரை

நெல்லைச் சீமையில், புரட்சியைத் தொடங்கினார். விளாத்திக்குளம், ஒட்டப்பிடாரம் போன்ற பகுதிகள் அடுத்தடுத்து ஊமைத்துரையின் வசமாயின. பசுவந்தனையில் இருந்த ஆங்கிலப் படையின் முகாம் மீது சுதேச வீரர்கள், நள்ளிரவு நேரத்தில் கொரில்லா தாக்குதல் நடத்தினர். அந்த வீரப்போரில் ஆங்கில வீரர்கள் 64பேரும், பாஞ்சை வீரர்கள் 96 பேர் விண்ணுலகம் அனுப்பப்பட்டனர். 

தூத்துக்குடியை கைப்பற்றுதல்

வெற்றி முழக்கமிட்டபடி ஊமைத்துரையின் சுதந்திரப் படை,  தூத்துக்குடி வரை முன்னேறியது. அங்கு ஆங்கிலேய அதிகாரியும், படைவீரர்களும் பிடிபட்டனர். பக்காட் என்ற ஆங்கிலேயப் பொறுப்பு அதிகாரி சிறைபிடிக்கப்பட்டான். ஆனால், அந்த அதிகாரியின் மனைவியான மெர்வின்னோலா என்பவரின் வேண்டுகோளுக்கிணங்க மனிதாபிமானத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டான். 

பசுவந்தனை” சம்பவத்தால் கடும் கோபம் கொண்ட பிரிட்டிஷ் இந்தியாவின் தென் பிராந்திய தளபதி கேப்டன் மெக்காலே, தரங்கம்பாடி, சென்னை, கல்கத்தா போன்ற பகுதிகளில் இருந்து கூடுதல் படைகளை வரவழைத்தார்.


Comments

Popular posts from this blog

சுதந்திரபோரில் ஊமைத்துரை எனும் ஓய்வு அறியாப் போராளி - Part 1

காகத்தியர்கள் யதுவம்சத்தவர்களே(ராஷ்டிரகூட யதுவம்ச மரபினர்)