Posts

Myasa Bedas மியாச பேடர்கள் (ஆராய்ச்சி கட்டுரை)

Image
JETIR2110057 Journal of Emerging Technologies and Innovative Research (JETIR) www.jetir.org a456 வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமையான ஆராய்ச்சி இதழ் (JETIR) www.jetir.org a456 https://www.jetir.org/papers/JETIR2110057.pdf  (original english article படங்குளுடன் உள்ளது. இதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது). Features of Pastoralism in The Rituals of Myasabeda Tribe மியாசபேத பழங்குடினர் சடங்குகளில் ஆயர்த்துவத்தின் (கால்நடை வளர்ப்பின்) அம்சங்கள்  ------------------------------------------------------------  டாக்டர். நாகேஷா எம்  முதுகலை டாக்டர் அவர்  பழங்குடியினர் ஆய்வு துறை  கன்னட பல்கலைக்கழகம், ஹம்பி  வித்யாரண்யா-583276  Ph-9900501774; nageshm189@gmail.com   அறிமுகம்  கலாச்சார நாயகன் என்பது பல தொன்மையான சமூகங்களின் மத மரபுகளில் காணப்படும் ஒரு புராணம்.  கலாச்சார நாயகன் சில சமயங்களில் உலகின் படைப்பில் உச்சநிலைக்கு உதவினாலும், மிக முக்கியமானது  கலாச்சார நாயகனுக்கான செயல்பாடு உருவாக்கத்திற்குப் பிறக...

12. மாவீரர் ஊமைத்துரை வரலாறு - தூத்துக்குடி மீட்பு போர் - கும்பெனி தளபதியை படகிலேற்றி தாய் நாடு அனுப்பியது.

Image
"High Spirited People - உயர்ந்த உணர்ச்சியுள்ள மக்கள்" மாணமும் வீரமும் நேர்மையும்  பரம்பரையாகவே கொண்ட மரபினர் மீது கொடுங்கோபத்தை மூட்டி வீண் பகைமையை வளர்த்தமையால் கும்பெனியற்கு தொல்லைகலும், அல்லல்களும் வம்பாக வந்தமைந்தன. பிறர் புரிந்த ஈன இழிவுகளைச் சகித்துக்கொள்ள முடியாமல் கொதித்தெழுந்து  மான உணர்ச்சியோடு நேரே எதிர்த்து போராட துணிந்தனர்.. தூத்துக்குடி கும்பெனியர் கோட்டையை மீட்க திட்டம் தீட்டுதல்: எதிரிகள் சேனையையும், ஆயுத கலன்களை பெருக்குவதையும் ஊமைத்துரை அறிந்தார். அவர்களுடைய ஆற்றல்களை குறைக்க வேண்டும் என எண்ணினார், அதற்கு கும்பெனியரின் முக்கியமான இடங்களை எல்லாம் குறிவைத்து மீட்கும் படலத்தை இன்னமும் விரைந்து முடிக்கினார். அதற்க்கான அடுத்த குறி தூத்துக்குடியை மீட்பது என தீர்மானித்தார். ஏனெனில் தூத்துக்குடி, ஆறுமுகநேரி ஆகிய பகுதிகளில் உப்பளங்கள் பல இவரது பாளையத்துக்கு உரிமையாய் இருந்தன, ஆகையால் அந்நகரை மீட்டே தீர்வோம் என சபதம் ஏற்றார். திட்டம் தீட்டுவதில் ஊமைத்துரைக்கு நிகர் வேறு எவரும் இல்லை. வெள்ளையர் நெஞ்சம் வெந்து கலங்கியது: கடல்வழியே சென்று வருவ...

11. மாவீரர் ஊமைத்துரை வரலாறு - ஸ்ரீவைகுண்டம் மீட்புபோர் தோற்றுத் திரும்பிய மேஜர் ஷெப்பர்டு(Major Sheppard)

Image
ஸ்ரீவைகுண்டம் தென்னாட்டில் கும்பெனியர் வசூல் செய்த வரிகளையும், தானியங்களையும், யுத்த ஆயுத தளவாடங்களையும் சேகரித்து வைக்கும் முக்கிய தலைமை இடமாக ஸ்ரீவைகுண்டம் அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. ஏற்கனவே யுத்த தளவாடங்களை கைப்பற்றிய பாஞ்சை படையினர் மொத்த தலைமை இடத்தையும் கைப்பற்ற எண்ணினர். அதன் பேரில் ஸ்ரீவைகுண்டத்தின் மீது படையெடுத்து விரைந்து பிடித்துக் கொண்டனர்.  அந்த செய்தி பாளையம்கோட்டை தலைமை தளபதிக்கு தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீவைகுணடம் கும்பெனியருக்கு முக்கியமான கேந்திரம் என்பதால் எப்படியும் மீட்டாக வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தனர். மேலும் கும்பெனி உரிமைகள் ஒன்றன் பின் ஒன்றாக முறையே பறிபோய் கொண்டிருப்பதை எண்ணி பரிதாபமாய் வருந்தினர்.  ஸ்ரீவைகுண்டம் மீட்பு போர் உடனே மேஜர் ஷெப்பர்டு தலைமையில் ஒரு பெரும் சேனையை தயார் செய்து அனுப்பினர். பாளைங்கோட்டைக்கு கிழக்கே பதினாறு மையில் தூரத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் விரைந்தது கும்பெனி படை. மார்ச் 13 ந் தேதி போரைத் துவங்கினர். பாஞ்சை வீரர்கள் வெறிகொண்டு தாக்கினர். முடியும்வரை போராடிப் பார்த்த கும்பெனி படைக்கு யாதும் பலனளி...

10. மாவீரர் ஊமைத்துரை வரலாறு- காடல்குடி போரும், குசல வீரகஞ்சய பாண்டியனும், தோற்று ஓடிய கேப்டன் ஹாசார்டும்

Image
காடல்குடி பாளையம் - குசல வீரகஞ்சய பாண்டியன் கி.பி. 1801 பிப்ரவரி மாதம் 2 ந் தேதி பாளையங்கோட்டை சிறை தகர்ப்பிற்கு பிறகு   புரட்சி படையினர் இழந்த பாளையங்கள் அனைத்தையும் மீட்டிருந்தனர் அவற்றுள் முக்கியமானது காடல்குடி பாளையம். பாஞ்சாலங்குறிச்சியும் காடல்குடியும் மிகநெருங்கிய இரத்த உறவுகள். வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை சகோதரர்களின் தாயார் ஆறுமுகத்தம்மாளும் , காடல்குடி மன்னர் வீர கஞ்சய பாண்டியன் அவரது மனைவி சண்முகத்தாய் அம்மாளும் உடன்பிறந்த சகோதரிகள். காடல்குடி மன்னரும், கட்டபொம்மனை போன்று வரிசெலுத்த மறுத்தவர், அதனால் ஆங்கிலேயர்கள் காடல்குடி மீது படையெடுத்து கைப்பற்றினர், பல இன்னல்களை சந்தித்தவர், பாளையம் தாக்கப்பட்ட பின்னர் பாஞ்சாலங்குறிச்சி சென்று அங்கு நடந்த போரில் களம் கண்டவர். கட்டபொம்மன் தண்டிக்கப்பட்ட அதே நாளான 16.10.1799 இல் வீரகஞ்சய பாண்டியனும் தூக்கிலிடப்பட்டார்.. அவருக்கு லவ வீரகஞ்சய பாண்டியன் மற்றும் குசல வீரகஞ்சய பாண்டியன் என இரு பிள்ளைகள் இருந்தனர். இவர்களில் குசல வீரகஞ்சய பாண்டியன் ஊமைத்துரையை சிறையிலிருந்து மீட்டதில் இவரின் பங்கு மிகப்பெரியது. இங்குதான் திட்ட...

9. மாவீரர் ஊமைத்துரை வரலாறு - இழந்த பகுதிகளின் உரிமைகளை மீட்டது மற்றும் ஆயுதச்சாலைகளை ஆயத்தம் ஆக்கியது..

Image
பாஞ்சையர் பலம்  மேலோங்கியது இரண்டாம் முயற்சியில் போர் செய்யவந்த கும்பெனி படைகள் புறமுதுகிட்டு பின்வாங்கிய நிகழ்வு மக்கள் மத்தியிலும், வீரர்கள் மத்தியிலும் ஒரு புத்துயிர் பிறந்ததை உணந்தனர். இதற்கு மீண்டும் கட்டப்பட்ட கோட்டையும், அரணை பலப்படுத்தியதுமே முக்கிய காரணமாக அமைந்தது.  இழந்த உரிமைகள் மீட்டது நெல்லைச்சீமையில்  ஏற்கனவே இழந்த தமக்கு உரிமையுள்ள  எல்லா பகுதிகளையும் ஊமைத்துரை மீட்டெடுத்தார். மேலும் எதிரிகளின் இயல்புகளையும், செயல்களையும், மதியூகங்களையும் ஒற்றர் மூலம் கண்காணித்து வந்தார், சேனைகளளை அதிகரிக்க அவர்கள் முயற்சிப்பதையும் அறிந்தார்.  ஆயுத சேமிப்பு அடுத்ததாக ஆயுத சாலைகளை தக்கபடி ஆயத்த படுத்த வேண்டும் என உறுதி பூண்டார். முன்னர் தங்களிடமிருந்து கவர்ந்த ஆயுதங்களை எல்லாம் சிந்துபூந்துரை மற்றும் ஸ்ரீவைகுண்டம் ஆயுத சேமிப்பு கிடங்கில் சேர்த்து வைத்திருந்தனர் வெள்ளையர்கள். வேல், வாள், வளரி, வெடிபொருட்கள் மற்றும் நிறைய போர்க்கருவிகள் அங்கே சேர்த்து வைத்திருந்தனர். திட்டம் வகுக்கப்பட்டு எழுநூறுக்கும் மேற்பட்ட வீரர்களை தயார்செய்து வீரலக்கு, ரணவீரசின்னு,...

கட்டபொம்மனை தூக்கிலிட்ட மேஜர்.ஜான் பானர்மேன் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதம். "கட்டபொம்மனின் அஞ்சா நெஞ்சத் துணிவை படம் பிடித்து காட்டுகிறது"

Image
வரலாறு படைத்த மாவீரன் கட்டபொம்மனின் கடைசி நிமிடங்கள் பானர்மேன் தன் நாள் குறிப்பில் எழுதி இருப்பது.  " விசாரணையின்போது, பாளையக்காரர் கட்டபொம்மு நடந்துகொண்ட விதம் அதிசயிக்கத்தக்கது."  ---------------------------------------------------------         காயத்தார் முகாம் விசாரணை எனும் வினோத நாடகம்  அக்டோபர் 16-ஆம் நாள் நீதிபதியைப் போல் பானர்மேன் அமர்ந்து கொண்டு விசாரணையைத் தொடங்கினார். ராபர்ட் ட்யூரிங், ஜார்ஜ் ஹுயெஸ், மேஜர் பெர்கெட், கர்னல் பிரெளன் ஆகிய நான்கு பேரும் பானர்மேனுக்கு இருபக்கத்திலும் அமர்ந்து இருந்தனர். முதல் குற்றச்சாட்டு :  கிஸ்தி கொடுக்கவில்லை. கட்டபொம்மன்: கிஸ்தி கொடுப்பது எங்கள் வழக்கம் இல்லை. இரண்டாவது குற்றச்சாட்டு:    கலெக்டர் லூசிங்டன் அழைத்தும்கூட நீங்கள் போய்ப் பார்க்கவில்லை. அவரை மதிக்கவில்லை. கட்டபொம்மன்: கும்பினி அதிகாரிகள் என்னைப் பார்க்க வந்தபோது, மரியாதையாக நடத்தி இருக்கின்றேன்; அன்போடு உபசரித்து இருக்கின்றேன். ஆனால், ஜில்லா கலெக்டரைச் சந்திக்க வந்து காத்துக் கிடப்பதற்கு நான் ஒன்றும் வேலைக்காரன் அல...

8.மாவீரர் ஊமைத்துரை வரலாறு - சீமைத்துரைகள் வாஞ்சையுடன் எழுதி வைத்துள்ள ஊமைத்துரையின் கீர்த்தியும், பாஞ்சாலங்குறிச்சியின் புகழும்

Image
உறக்கமில்லாத இரவுக்கு மீண்டும் ஓர் பேரிடி கோட்டையை எளிதாக அழித்து விடலாம் என்ற கனவோடு வந்த மேஜர் மெக்காலே திகைத்து நின்றான். அவனுடன் வந்த தளபதி அந்த நிகழ்வை இவ்வாறு எழுதுகிறான்    "After a sleepless night, we marched the next morning and reached a plain close to Panchalamcoorchy by nine 'o' clock, when, to our utter astonishment, we discovered that the walls, which had been entirely levelled, were now rebuilt, and fully manned by about fifteen hundred Polegars"               " உறக்கமில்லாத இரவுக்குப் பிறகு, மறுநாள் காலை நாங்கள் அணிவகுத்து, ஒன்பது மணிக்கு பாஞ்சாலம்கூர்ச்சிக்கு அருகில் உள்ள ஒரு சமவெளியை அடைந்தோம், எங்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், முற்றிலும் சமன்படுத்தப்பட்ட மதில்கள் இப்போது மீண்டும் கட்டப்பட்டு, முழுமையாகக் கட்டப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தோம்.  மேலும் சுமார் ஆயிரத்து ஐந்நூறு பாளையக்காரர்கள் ஆயத்தமாய் இருந்தனர்"                  - The second polegar war- அரனும...