"கட்டபொம்மு சரித்திரக்கும்மி"4
"கட்டபொம்மு சரித்திரக்கும்மி"4
பாஞ்சைக்குக் கேடு, வரக்காரணம்
அப்படிக் கொத்த பாஞ்சை நகருக்கு
அழிவு வந்ததைக் கேளுமையா
வந்த விதிசகளைச் சொல்லுகிறேன் அந்த
மார்க்கத்தைக் கேளுங்கள் நல்லோரே
தந்திரமாயிந்தச் சமையோ ரெட்டுக்குஞ்
சாகஷன் மேஷர் சலைக்கட்டராய்
சென்ன பட்டணம் கெவர்மெண்டார் துறை
செப்பிய உத்திரவின் படியாய்
பயென்னாராஞ் சாகிஷன் மேஷா் துரை வலு
இங்கிலீசுத்துரை கெங்கு துரை
வந்தானே ராமநாத புரத்தில் துரை
வல்லமை சொல்லக் கேளும் நல்லோரே
தந்தை மகிழ்ந்தல்லோ -சாகிஷன் மேஷரும்
சீமைக் கதிகாரம் பார்த் தனனாம்
எட்டயபுரம் பிரதானி வந்து துரை
யிடத்தில் என்ன பிராது '” சொல்வார்
தர்மத்துரைகளே சேளுமென்று வெகு
சாதுரியமாகவே சொல்லுவஈனாம்
அருங்குளத்திலே கம்பங் கம்ர்ச் சாணை
ஆயிரங்கோட்டையுங் கொள்ளை சொண்டார்
வருமங்களாகவே தட்டைப் படப்பிலே
பெரு நெருப்பைக் கொளுத்தி விட்டார்
விருதாப் '* பொல்லாங்கு செய்யுகிறார் எங்கள்
வீட்டில்வந்து கொள்ளை யடிக்குகிறார்
எப்போதும் வென்றான் காட்டு நாயக்கன்பட்டி '”
எல்லைச் சதிரிலே மேய்ந்த மாட்டை
முப்பது நாற்பது பால்ம௱ட்டை.. ஓட்டி
முன்ஜா ரெருதையுங் கொள்ளை கொண்டார்
தூத்துக்குடியிலே வெள்ளைக்காரர் வீட்டில்
தொண்ணூறு சாக்குப் பண மெடுத்தா௱ர்
பார்த்தர்களோ ஞாயம் பார்த்தீர்களோ ஆடிக்
காத்திலே தீயைக் கொளுத்துகிறூர்
பட்டிக்கா டெங்கும் பறிபோச்சே தட்டைப்
படப்பிலே வெகு கொள்ளையாச்சே
கட்டபொம்முதுரை துஷ்டரையா அவா்
கன்னக் களவிலே மிச்சமய்ய௱ !'
இப்படிக் கொள்ளை யடித்தாக்கால் நாங்கள் யென்னமாய்க் காலங் கழித்திடலாம்
இப்போதவரை வரவழைத்துத் துரை
யிந்தச்சணம் ஞாயம் கேட்காவிட்டால்
யெங்களுக்குக்குடி யங்கேயில்லை அவர்
தங்களாலே வெகு துன்பமையா
இங்கே அவரை வரவழைத்துத் நுரை
தாங்கள் விசாரணை செய்யாவிட்டால்
பாருங்களென்று ஒரு நொடியில்ச் சென்ன
பட்டணம் போறேன் 'பிறாதுக் கென்ளூர்
பாருபாரென்றுமே சொல்லிடவே யந்தப்
பாராளுமேஷர் கலைக்கட்டரும்
சீமைக்கதிகாரி கவுனர் துரை யிந்தச்
செய்திகள் கேட்டு விளங்குவிட்டார்
மாமூல் வழக்கமும் பார்த்துவிட்டார்துரை
கோபமாய்ச் செய்தியுரைத்த விட்டார்
Comments
Post a Comment