பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை ஆங்கில ஏகாதிபத்தியம் தகர்க்க காரணமாக இருந்த அரசியல் சூழ்ச்சியும் & சதியும் - யாரும் பேசாத நுட்பமான வரலாறு.

#ஆர்காட்டுநவாபு 1781-இல் ஆங்கிலேயருக்குக் கொடுத்திருந்த வரி தண்டல் உரிமையை 1785-இல் திரும்பப் பெற்றார். 

#தமிழகத்தின் தெற்குச் சீமையில் மட்டுமாவது  வரிதண்டல் உரிமையை தங்களிடம் ஒப்படைக் குமாறு  நவாபை வற்புறுக்கினர் வெள்ளையர். அவர் அதற்கு உடன்படவில்லை. 

#நவாபின் விருப்பத்திற்கு எதிராக 1790-இல் தெற்குச் சீமையில் வரிதண்டல் உரிமையைத் தாங்களே ஏற்றுக்கொண்டதாக ஆங்கிலேயர் ஓர் அறிக்கையை வெளியிட்டனர். 

#திருநெல்வேலியில் ஒழுங்காகச் சம்பளம் கிடைக்கப்பெறாமல் நிலைகுலைந்து நின்ற நவாபின் படைகளையும் அவர்கள் தங்களோடு எளிதாக இணைத்துக் கொண்டனர். 

#தவிர்க்க இயலாத சூழ்நிலையில் நவாபு 1792-இல் ஆங்கிலேயருடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன் படி ஆங்கிலேயர் தெற்குச் சீமைகளிலே வரிதண்டல் செய்து செலவு போக எஞ்சிய தொகையை வெள்ளையர்களுக்கு நவாபு கொடுக்க வேண்டிய கடனுக்கு வரவு வைத்துக் கொள்ளவேண்டும். 

#கடன்தொகை முழுவதும் வரவு வந்த பின்னர் நாட்டைத் திரும்ப நவாபிடம் ஒப்படைத்து விட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

#இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தெற்குச் சீமையில் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஆங்கிலேயர் முதலில் பாளையங்களை ஒழுங்கு படுத்துவதில் ஈடுபட்டனர். 

#ஆங்கிலேயரிடம் எதிர்ப்புணர்வு கொண்ட பாளையங்களை ஒடுக்குவது அவர்களுடைய முதல் பணியாக இருந்தது. 

#பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரர் தொடக்கம் முதலே வெள்ளையரிடம் விரோதம் பாராட்டி வந்தனர். இதனாலேயே பாஞ்சாலங்குறிச்சி ஆறு பெரும்  படையெடுப்புகளைச் சந்திக்க நேர்ந்தது. 1790-இல் வீரபாண்டியக் கட்டபொம்மன் ஆட்சிப் பொறுப்பேற்ற போது அப்போராட்டம் உச்ச நிலையை அடைந்திருந்தது.

#பாளையக்காரர்கள் கோட்டை கட்டவும் படைதிரட்டவும் ஆயுதங்கள் சேகரிக்கவும் தடைவிதிக்கப்பட்டது. 

#கோட்டைகளை இடிக்கும் பொருட்டு 1792-இல்  விளம்பரத்தை "கர்னல் மாக்ஸ்வெல்" வெளியிடப் பட்டபோது பானர்மேன் அவருடைய செயலாளராக இருந்தார். 

#பாளையக்காரர்கள் குத்தகைதாரர் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். பாளையக்காரர் என்ற உரிமை பாரம்பரியமாக வருவது. ஆனால் குத்தகைதாரரை" அரசு எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம். 

#பாளையக்காரர்களுக்கு நவாபு அளித்திருந்த பல உரிமைகளை ஆங்கிலேயர் இந்த அறிக்கை மூலம் பறிக்க முயன்றனர். 

#பாளையங்களை ஒழிக்கும் திட்டத்தை நவாபு விரும்பவில்லை. நவாபு இனங்காவிட்டாலும் இதனை நிறைவேற்றிவிட வேண்டுமென்று ஜூன் 1795-இல் இங்கிலாந்திலிருந்த இயக்குநர்கள்( Court of Directors) முடிவு செய்தனர்.

#ஆனால் கும்பனியரால் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற இயலவில்லை என்பதைக் கால்டுவெல் பின்நாளில் குறிப்பிட்டுள்ளார்.

#பாஞ்சாலங்குறிச்சிப் பாளையம் இந்தத் திட்டத்திற்குப் பெரும் தடையாக நின்றது. வீரபாண்டியக் கட்டபொம்மு நாயக்கர் இந்த அறிவிப்பை ஏற்க மறுத்தார். இது தமது பாளைய உரிமையையும் தன்மான உணர்வையும் பறிக்கும் திட்டம் என்பதை உணர்ந்தார். இதனை எதிர்த்து வரி கொடுக்க மறுத்தார். 

#அவர் ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு கூட்டணியை உருவாக்கினார். அதில் நாகலாபுரம், கோலார்பட்டி, ஏழாயிரம் பண்ணை, காடல்குடி, குளத்தூர் ஆகிய பாளையங்கள் இணைந்தன. 

#கி.பி 1797-இல் ஏற்பட்ட புரட்சியில் நெல்லைச் சீமை பாளையக்காரர்களில் பெரும்பாலானவர்கள் கட்டபொம்மன் தலைமையில் கலந்துகொண்டனர் அவர்கள் வரி செலுத்தவும் மறுத்தனர்.

#பாஞ்சாலங்குறிச்சி கோட்டையும், அதன் மன்னர் கட்டபொம்மன் இருக்கும் வரை நாம் நிம்மதியாக இங்கே அரசியல் செய்ய முடியாது என்பதை உணர்ந்த கும்பனியர் அதை மொத்தமாக தரைமட்டமாக்க எத்தனித்தனர் என்பது தான் இந்த நுட்பமான அரசியல் சூழ்ச்சி. (இதை இங்கே எந்த வரலாற்று ஆய்வாளர்களும் பேசுவதில்லை)

#இதை கருத்தில் கொண்டு கட்டபொம்மனுக்கு எதிரான சூழ்ச்சிக்கு காரணங்களை தேடும் பட்சத்தில் தானாபதி பிள்ளையின் ஸ்ரீவைகுண்டம் செயல் இதற்கு வாய்ப்பாக அமைகிறது.

#இதை காரணம் காட்டி பரிந்துரை கடிதங்கள் பறக்கின்றன, ஆலோசிக்கப்படுகின்றன.

#இதில் முன்பே நன்கு அனுபவமிக்கவரான மேஜர் பானர்மேன் தலைமை தளபதியாக நியமிக்கப்படுகிறார். உப தளபதிகளாக ஓர்லி, புரூஸ், காலின்ஸ், டக்ளஸ், டார்மீக்ஸ், ப்ரபென் என்று பல்வேறு நபர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

#பரிந்துரைக்கப்பட்ட அனைத்தும் ஏற்பாடாயின. அவை ஒரு சேர பாஞ்சையை நோக்கி முன்னேறின.


சுவடுகள் தொடரும்....





Comments

Popular posts from this blog

சுதந்திரபோரில் ஊமைத்துரை எனும் ஓய்வு அறியாப் போராளி - Part 1

காகத்தியர்கள் யதுவம்சத்தவர்களே(ராஷ்டிரகூட யதுவம்ச மரபினர்)